Monday, August 2, 2010

10 அறிஞர்கள்+11 மூடர்கள் =21 மூடர்கள் =ஜனநாயகம்!

10 அறிஞர்கள்+11 மூடர்கள் =21 மூடர்கள் =ஜனநாயகம்!
“என்றோ ஓர் அறிஞன் 10 அறிஞர்களுடன் 11 மூடர்கள் இணையும்போது 21 பேரும் முடர்களாகி விடுகிறார்கள். இதுவே ஜனநாயகத் தத்துவம்” என்று ஜனநாயகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல் இன்னொரு அறிஞர் “அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் அரசியல்” என்று முன் மொழிந்துள்ளார். இந்த இரண்டு அறிஞர்களின் கூற்றுகள் இன்று 100% நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்பதை பாராளுமன்ற, சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
நாட்டிலுள்ள தாதாக்கள், சாராய வியாபாரிகள், விபச்சார விடுதிகள் நடத்துபவர்கள், போதைப் பொருள் கடத்துகிறவர்கள், ரவுடிகள், முடிச்சுமாறிகள், கிரிமினல்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பிறர் சொத்தை அபகரிப்பவர்கள், மக்கள் சொத்தை சிறிதும் கூச்சநாச்சமின்றி விழுங்குகிறவர்கள்தான் இன்று பெரும்பாலும் முதல்வர்களாக, மந்திரிகளாக, மேயர்களாக, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. எம்.சி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இல்லை விலை கொடுத்து இப்பதவிகளை வாங்கிக் கொண்டு வலம் வந்து ஜமாய்க்கி றார்கள். தவறான வழிகளில் வட்டியும், முதலுமாக பல்லாயிரம் கோடிகளை அதுவும் மக்கள் சொத்தைச் சுருட்டுகிறார்கள்.
“உலகின் அழிவுக்குச் சமீபமாக தகுதியற்றவர்களே அதிகாரத்திற்கு வருவார்கள்’’ என்ற இறுதி இறைத்தூதரின் முன் அறிவிப்பிற்கு ஏற்ப இன்று முற்றிலும் தகுதி அற்றவர்களே ஆட்சி பீடங்களில் அமர்ந்துள்ளனர். பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும். அவர்களின் அறிவுக்கு ஏற்றவாறே அவர்கள் ஏற்படுத்தும் சட்டங்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?
மக்களிடையே ஒழுக்கக் கேட்டையும், அநீதி அராஜகங்களையும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இரண்டு கால் மிருக வாழ்க்கையான குடி, கூத்தியா, மிருக சல்லாபம் என மனிதப் புனிதனாக உயர வேண்டிய மனிதனை மனித மிருகமாக்கும் அறிவற்ற சட்டங்களே அமுல் படுத்தப்படுகின்றன.
குடிக்கு அனுமதி, விபச்சாரத்திற்கு அனுமதி, அப்பன் பெயர் தெரியா அப்பாவி குழந்தைகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் வகையில் திருமணமின்றி ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு சட்டத்தில் அனுமதி, ஏன்? இனப் பெருக்கத்தையே கொச்சைப் படுத்தும் வகையில் ஆணும், ஆணும் இணைந்து வாழ்வதற்கு அனுமதி , பெண்ணும், பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு அனுமதி இப்படி மனிதனாக வாழ விரும்புகிறவர்கள் எழுதவே கூசும் மிருகங்களுக்குரியவற்றை நடைமுறைப்படுத்தும் நீதிமன்றங்கள், நீதிபதிகள், அரசுகள், அரசு அதிகாரிகள். ஏன்? ஐயறிவு மிருகங்களை விட கேடு கெட்ட நிலை. ஆம்! மிருகங்களில் ஆணும் ஆணும், பெண்ணும், பெண்ணும் இணையும் கேடுகெட்ட நிலையைப் பார்க்க முடியுமா? முடியாதே! மிருகங்களுக்கு ஆகும் ஆகாது, கூடும் கூடாது என்ற விதிமுறைகள் எதுவுமே இல்லை. ஒழுக்க விதிகள் என எதுவுமே மிருகங்களுக்கு இல்லை. இந்த நிலையில் அந்த மிருகங்களே ஈடுபடத் துணியாத மிகவும் கேடுகெட்ட ஓரினப் புணர்வில் ஈடுபடும் ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஆறறிவு மனிதனைப் பற்றி என்ன சொல்ல? அதைச் சட்டமாக்கத் துணியும் நீதி மன்றங்களின், நீதிபதிகளின் இழிநிலை பற்றி என்ன சொல்ல?
ஆட்சியாளர்களிலிருந்து, அரசு அதிகாரிகளலிருந்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்ட காவல்துறையிலிருந்து, நீதிபதி கள், நீதித் துறையிலிருந்து அனைத்துத் துறையினரும் மக்கள் பணத்தைக் கோடிகோடியாக கொள்ளை அடிப்பதில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு படு உற்சாகமாகச் செயல்படுகிறார்கள்.
முறை தவறி மக்கள் பணத்தை கோடி கோடியாகக் கொள்ளையடிப்பது ஒரு பக்கம் இருக்க, ன்னொரு பக்கம் கொடுமையான வரிகள் மூலம் மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பான்மை மக்களை வறுமைக் கோட்டி ற்குக்கீழே தள்ளி அரசு கருவூத்தில் குவியும் பணத்தையும் இவர்களின் ஆடம்பர, அநாவசிய விழாக்களிலும், இவர்களின் பேர் புகழுக்காகவும், இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் காரணமாக தங்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஏற்படுத்தப்படும் பல அடுக்குப் பாதுகாப்பு வளையங்கள் இப்படி இவர்களுக்காகவே இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக அரசு கருவூலத்திலுள்ள மக்கள் பணம் வாரி இறைக்கப்படுகிறது.இது போதாதென்று மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் உதவாத அதே சமயம் மாநிலங்களுக்கு மாநிலம், நாட்டிற்கு நாடு போட்டி பொறாமையுடன் வீண் பெருமைக்காக பல்லாயிரம் கோடி மக்கள் பணம் வீண டிக்கப்படுவதற்கு ஆட்சியாளர்கள் காரணமாக இருக்கிறார்கள். ஏழைகள், நடுத்தர மக்களுக்கு பல மணி நேரம் மின்தடை; இவர்களின் வீண் ஆடம்பர விழாக்களுக்கு பல ஆயிரம் யூனிட் மின் திருட்டு. மேலும் உலகளாவிய அளவில் தீவிரவாதமும், மத, இன, பிரதேச, மொழிச் சண்டைகளை உரமிட்டு நீர்ப் பாய்ச்சி அவற்றை வளர்ப்பதிலும் இந்த ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் பிரச்சினைகளை அணுகும் முறைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் “நனைத்துச் சுமப்பது என்று சொல்வார்களே அது போன்ற நிலைதான். விவகாரங்களை முளையிலேயே கிள்ளி எறியாமல் இருந்து விட்டு காலம் கடந்து அது பெரும் அசுர மரமான பின்னர் பெரும் முயற்சி எடுத்து, அரசு பணத்தை அனாவசியமாக செலவிட்டு கோடரியால் வெட்டிச் சாய்ப்பது போல்தான் அரசு நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
இக்காலக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர் கள் பொறுமை இழந்து ஆர்ப்பாட்டம், பந்த், சாலை மறியல், பேருந்து, சரக்குந்து ஓடாமை, அதனால் மக்களுக்கும் பெரும் பாதிப்பு, அரசு பொது சொத்துக்களுக்குத் தீ வைப்பு, உடைத்து நாசமாக்குவது என பல்லாயிரம் கோடி நட்ட மான பின்னரே அரசு இயந்திரம் நடவடிக்கையில் இறங்கும். இப்படி எழுத்தில் வடிக்க முடியாத எண்ணற்ற துன்பங்களுக்கு இப்போதைய அரசுகளே காரணமாக இருக்கின்றன. 5%பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள் மேலும் பல்லாயிர கோடிகளைச் சுருட்டவும், 95% மக்கள் மேலும் மேலும் பரம ஏழைகளாகித் துன்பப்படும் வகையில்தான் இந்த அரசுகள் சட்டங்கள் இயற்றுகின்றன.
ஆக, ஜனநாயக ஆட்சி முறை அயோக்கியர்கள் ஆட்சியில் அமர்ந்து மக்கள் பணத்தைப் பல வழிகளில் கொள்ளை அடித்து அவர்கள் உண்டு கொழுக்கவும், ஊதாரித்தனமாக செலவு செய்ய வும் வழிவகை செய்கிறதே அல்லாமல் மக்களுக்கு உரிய பலனைத் தருவதாக இல்லை. ஜனநாயக ஆட்சி மட்டுமல்ல, சர்வாதிகார ஆட்சி, கம்யூனிச ஆட்சி, சோசலிச ஆட்சி என மனிதர்கள் அமைக்கும் எப்படிப்பட்ட ஆட்சியாக இருந்தாலும், மதங்களை வைத்து மக்களை மயக்கி இந்த ஆட்சியாளர்களைப் போலவே மக்கள் பணத்தை உண்டு கொழுத்து உல்லாச ஆபாச வாழ்க்கை வாழும் புரோகிதர்கள் கூறும் மதங்களின் வாழ்க்கை முறையாக இருந்தாலும், மனிதனின் உண்மையான ஈடேற்றத்திற்கு அவை ஒரு போதும் வழி வகுக்கா.
இவ்வுலகிலும் பெருந்தோல்வி, நாளை மறுமையிலும் நரக வாழ்க்கையே பரிசாகக் கிடைக்கும். மனித வாழ்க்கைக்கு மனிதனே சட்டம் அமைப்பது திருடனே திருட்டுக்குத் தீர்ப்பு அளிப்பதாகும். பரீட்சை எழுதும் மாணவனே அதைத் திருத்தி புள்ளிகள் போடுவது போலாகும். தன்னைப் போல் அற்ப அறிவுள்ள ஒரு மனிதன் தயாரித்த ஒரு நவீன கருவியை இயக்க அதைத் தயாரித்த மனிதனின் வழிகாட்டலை எதிர்பார்க்கும் இந்த அற்ப அறிவுள்ள மனிதன், முழுமையான அறிவுள்ள சர்வ வல்லமை மிக்க தன்னந்தனியான, இணை துணை இல்லாத இறைவன் படைத்த மனிதக் கருவியை, படைத்த அந்த இறைவனின் வழிகாட்டலைப் புறக்கணித்து, இந்த அற்ப அறிவுள்ள மனிதனே சுயமாக வழிகாட்டல் அமைத்து அதன்படி நடந்தால் அது உருப்படுமா? அந்த அலங்கோலமே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. நிம்மதியற்ற, அமைதியற்ற, துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை மனித சமுதாயம் அனுபவித்து வருகிறது.
இந்த பரிதாப துன்ப நிலை மாறவேண்டுமா? அற்ப அறிவுள்ள மனிதர்கள் போட்ட வாழ்க் கைத் திட்டத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, அகிலங்களையும், அவற்றிலுள்ளவற்றையும் மனிதனையும் படைத்து, உணவளித்து வரும் நிறைவான அறிவையுடைய சர்வ வல்லமை மிக்க ஒரே இறைவனின் வழிகாட்டலை எடுத்து நடக்க மனிதன் முன் வர வேண்டும். இறைவன் ஆரம்பத்திலிருந்து அளித்து வந்த ஹிந்து வேதங்கள், யூத தோரா, கிறித்வ பைபிள், இன்னும் இவை போல அனைத்து வேதங்களும் மனிதக் கரம் பட்டு கலப்படமாகி அவற்றின் தூய நிலையை இழந்து விட்டன.
இறைவனும் முன்னைய அனைத்துக் கலப்படமான வேதங்களையும், அரசுகள் பழைய ரூபாய் நோட்டுகளை செல்லாதவை என ஆக்குவதுபோல், செல்லாதவையாக ஆக்கிவிட்டான். செல்லாத நோட்டுகள் அரசால் நிராகரிக்கப்படுவது போல் முன்னைய வேதங்களும் செல்லாத நிலையில் இறைவனால் நிரகாரிக்கப்படும். இறைவனால் இறுதியாகக் கொடுக்கப்பட்டு, அந்த இறைவ னாலேயே ஒரு புள்ளியும் மாற்றப்படாமல், பாதுகாக்கப்படுவதோடு, அது இறங்கிய அரபி மொழியும் பேச்சு வழக்கில் இருக்கிறது. முன்னைய வேதங்கள் இறங்கிய அனைத்து மொழிகளும் நடைமுறையில் இல்லாமல் செத்த மொழிகளாகிவிட்டன. இது ஒன்றே அவை செல்லத்தக்கவையல்ல என்பதை உறுதிப் படுத்துகிறது. எனவே மனிதர்கள் அனைவரும் இறைவன் கொடுத்த இறுதி நெறிநூலான அல்குர்ஆனை பற்றிப் பிடித்து (3:102,103) அதன் படி நடக்க முன்வந்தால் மட்டுமே உலகம் ஈடேறும். மனிதன் வெற்றி பெறுவான். அல்குர் ஆன் படி தாமும் நடந்து, மற்றவர்களையும் நடத்திச் செல்லக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதன்படி நடக்காததால் மிகக் கடுமையான தண்டனைக்கு ஆளாக இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment