Sunday, August 8, 2010

தமிழ் மொழி ஊடகங்கள் மேற்கு கூறும் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் தன்மையை மட்டும் கொண்டவையா ?

தமிழ் மொழி ஊடகங்கள் மேற்கு கூறும் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் தன்மையை மட்டும் கொண்டவையா ?




ஆப்கானிஸ்தானில் தினமும் பலர் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையால் கொன்று குவிக்கபடுகின்றனர் இதில் குழந்தைகளும் இளம் பெண்களும் தான் அதிகம் ஒரு மாதம் ஒன்றுக்கு 120 வரையிலான பெண்களும் குழந்தைகளும் குண்டுகளாலும் ஏவுகனைகளாலும் கொல்லபடுகின்றார்கள் என்றால் அதில் பல மடங்கு காயபடுகின்றனர்.
இவர்களின் முகம் சிதைக்கப்பட்டவர்கள் கண்களை இழந்தவர்கள், கைகளை இழந்தவர்கள், உடல் முழுவதும் காயங்களால் கோரமாக ஆக்கப்பட்டவர்கள் தாக்கபட்ட பின்னர் மருத்துவம் மறுக்கப்பட்டவர்கள், முறையான சிகிச்சை வழங்கபடாமையால் அவயவங்களை இழக்கும் நிலையில் உள்ளவர்கள் என்று ஆயிரகக்னகான ஆப்கான் பொதுமக்கள் ஆப்கானிஸ்தானில் நிறைந்து வரும்போது அவர்களை பற்றி மேற்கு மீடியாக்கள் திட்டமிட்டு அவர்கள் பற்றிய தகவல்களை புறக்கணிகின்றன அவற்றை youtube போன்ற இணையத்தளங்களில் யாரும் பதிவு செய்தாலும் அவைகள் உடனடியாக நீக்கபடுகின்றன அமெரிக்கா செய்தால் அது கொலையல்ல, மேற்குலக பயங்கரவாதம் அது ஜனநாயகம் என்ற காட்டு சட்டம் பின்பற்றபடுகின்றது விரிவாக
இந்த வருடம் கடந்த ஆறு மதங்களில் மட்டும் 1200 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் -என்று ஆப்கான் மனித உரிமை அமைப்புகள் Afghanistan Rights Monitor தெரிவித்துள்ளன இந்த காலபகுதியில் காயம் அடைந்தவர்கள் இறந்தவர்களைவிடவும் மிகவும் அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகின்றது இந்த தகவல்களுக்கு மேற்கு ஊடகங்கள் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை அந்த விபரங்கள் சாதாரண செய்தியாக மட்டும் வெளிவருகின்றன இல்லை அவை திட்டமிட்டு அதன் முக்கியத்துவம் புறக்கணிக்கபடுகின்றது இதை மிக சிறந்த ஊடகவியலாளரான Robert Fisk மேற்கத்திய ஊடகங்கள் சுதந்திரமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும் அவை பக்க சார்பான போக்கை கைவிடவேண்டும் என பிரிட்டன் ஊடகவியலாளர் தெரிவித்து வருகின்றமை மேற்கின் பக்கசார்பு நிலையை எடுத்து காட்டுகின்றது
அதற்கு மாறாக இஸ்லாத்தில் பெண்களின் நிலை அடிமை நிலைக்கு ஒப்பானது என்றும் பெண்கள் அடைமைபடுத் தபப்டுகின்றனர் என்றும் பெண்களுக்கு இஸ்லாத்தில் எந்த வகையான உரிமைகளும் வழங்கபடுவது இல்லை என்றும் உரிமைகளுக்கு பதிலாக பெண்கள் கொடுரங்களை எதிர்கொள்வதாகவும் சித்தரித்து வருகின்றது இந்த வகையில் கடந்த வருடம் பாகிஸ்தான் தாலிபான்கள் ஒரு இளம் பெண்ணை நடுவீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஒளி ஒலி பரப்பியது இது பாரிய உணர்வலைகளை எழுப்பியது இதன் பின்னர் இந்த வீடியோ திட்டமிட்ட முறையில் அமெரிக்க , பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் இணைந்து அந்த வீடியோ வை உருவாக்கியது என்று தெரியவந்தது ஆனால் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி முக்கியத்துவம் கொடுக்கப் படாமல் புறக்கணிக்க பட்டது இங்கு நான் தாலிபான்களின் நடவடிகளைகளை முழுமையாக ஏற்றுகொண்டவனாக இதை கூறவில்லை.
இங்கு கவனிக்க படவேண்டிய விடையம் இஸ்லாத்தையும் அதன் நாமத்தால் செயல்படுபவர்களையும் இழிவுபடுத்த, பயங்கரவாதிகளாகவும், நாகரீகம் அற்றவர்களாகவும் காட்ட முற்படும் மேற்கு மீடியாக்கள் மேற்குலகின் நாகரீகத்தின் விளைவாக மேற்கில் நடைபெறும் மிகவும் பயங்கரமான கொடூரங்களை முதன்மை படுத்தி காட்ட முன்வருவதில்லை என்பதும் மேற்கு உலகம் மற்ற நாடுகளில் புரியும் பயங்கரவாதம் மேற்கு மீடியாக்களில் முக்கியத்துவம் பெறுவதாக இல்லை என்பதும்தான்
மேற்கு ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளரும் சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவருமான ஜோன் பிராட்லி என்ற ஊடகவியலாளர் மேற்கு ஊடகத்துறை பற்றி இப்படி கூறுகின்றார்
அமெரிக்க ஊடகங்களில் அரபுலக சிறுவர்கள் கொலை செய்யப்படுவது மறைக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சிறுவன் இஸ்ரேலில் இறந்தால் அதற்கான ‘சிறப்புப் பார்வை’ நிகழ்ச்சிகள் அமெரிக்க ஊடகங்களில் அரங்கேறுவதைக் காணலாம். காஸா , மேற்குக்கரைப் பகுதிகளை அமெரிக்க ஊடகங்கள் முன்பு குறிப்பிடுகையில் “Occupied” அல்லது “Occupation” போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு வந்தது. தற்போது அத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு “Contested அல்லது Disputed” போன்ற பிரயோகங்களாக மாறுதல் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு படி மேலே போய் பலஸ்தீனின் அப்பகுதிகளையே “இஸ்ரேல்” என்றே அழைக்கும் ஊடங்களும் அமெரிக்காவில் உண்டு.
இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானில் கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கானில் நிகழ்ந்துள்ளது என்றும் இந்த இளம்பெண்ணின் பெயர் ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே அவரது தந்தை, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார் என்றும். அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார் என்றும் ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர் என்றும்
அதனால் அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது என்றும்
உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.என்றும் இந்த பெண்ணின் துயரை துடைக்க அமெரிக்க நிறுவனங்கள் பல முன்வந்துள்ளது என்றும் இவர் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைக்காக அமெரிக்கா பயணமாகின்றார் என்றும் அமெரிக்க டைம்ஸ் முகப்பு படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது இந்த செய்தி எல்லா தமிழ் தளங்களிலும் உலாவருகின்றது
இதன் உண்மை தன்மை வழமைபோன்று போலியாக சோடிக்க பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை , இங்கு கவனிக்க படவேண்டிய விடையம் தமிழ் மொழி ஊடகங்களிலும் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய மேற்கு ஊடகங்கள் திரித்து கூறுபவை அப்படியே மாற்றங்கள் ஆய்வுகள் இன்றி மொழிபெயர்க்க படுவதால் இஸ்லாமிய எழுச்சி பற்றிய மிகவும் திரிக்க பட்டதகவல்கள் மட்டும் தமிழ் மொழியில் கிடைக்க பெறுகின்றது உலகில் நடைபெறும் இஸ்லாமிய எழுச்சி அலைகளை சரியான முறையில் தமிழ் மொழியில் வழங்க கிடைக்க பெரும் தகவல்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு சரியான தகவல்களை வழங்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவை எம் மீது உள்ளது
உதாரணமாக பாகிஸ்தானில் மஸ்ஜிதுகளில் வெடிக்கும் குண்டுகள் இவைகள் முஸ்லிம்களால் முஸ்லிம்கள் கொலை செய்யபடுவதாகவும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை செய்து வருவதாகவும் மேற்குலக ஊடகங்கள் கூறிவரும் அதே வேளை பாகிஸ்தானில் பல பொது அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் இவை அமெரிக்க உளவு நிறுவனங்களில் சதி நாச வேளை இவற்றுக்கு விதைகளை விதைப்பவர்கள் மேற்கு உளவு மற்றும் அவர்களின் உள்நாட்டு முகவர்கள் என்பதை ஆதாரங்களுடன் கூறிவருகின்றது – அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான – Webster Tarpley – பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அமெரிக்கா என்றும் பிளக் வேட்டர் -Black-Water என்ற அமெரிக்காவின் தனியார் இராணுவம் இந்த குண்டுகளை வைப்பதாகவும் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றார்- ஆனால் தமிழ் மொழியில் மேற்கு ஊடகங்கள் கூறுபவை மட்டும் எந்த ஆய்வுகளும் இன்றி மொழிபெயர்க்க படுகின்றது இதனால் தமிழ் மொழியில் செய்திகள் பொய்யான தகவல்களுடன் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மேற்கின் ஊடக பயங்கரவாதம் தமிழிலும் அரங்கேறுகின்றது
தமிழ் மொழி ஊடகங்கள் பொதுவாக உலக விவகாரங்கள் தொடர்பில் சொந்தமான ஆய்வுகளை கொண்டவை அல்ல மேற்கு கூறும் கதைகளை தமிழ் மொழிபெயர்க்கும் தன்மையை மட்டும்கொண்ட வையாக காணப்படுகின்றமை உண்மையான செய்திகள் தமிழ் மொழி உலகிற்கு தவறி விடுவதுடன் சோடிக்கப்பட்ட போலியான தகவல்களால் தமிழ் மொழி உலகம் ஆதிக்கம்பெறுகின்றது
மீடியாக்களின் பாதிப்புகளை விளங்கிக்கொள்ள டாக்டர் சாகிர் நாயிக் இப்படி கூறினார் ஒரு முஸ்லிம் ஒரு சினிமா படத்தை , பாடலை பார்ப்பதை விடவும் ஆபத்தானது இன்றைய செய்திகளை பார்ப்பது சினிமா படம் , பாடல் என்பன பாவத்தை தூண்டும் பாவங்களாக இருக்க செய்திகளை பார்ப்பது குப்ரை இஸ்லாத்தை நிராகரிக்க தூண்டும் விடயமாக இருக்கிறது என்றார் அந்த அளவுக்கு இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை கொண்டதாக இன்றைய செய்திகள் உருவாக்கபடுகின்றது என்பதை நாம் விளங்கி கொள்வதுடன் அவற்றை சரியான உண்மை தோற்றத்துடன் முன்வைக்க முயற்சிக்க வேண்டும் ஒரு முஸ்லிம் இவற்றை பார்க்கும் போது இஸ்லாத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படுகினது என்றால் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளாத மனிதர்கள் பார்க்கும்போது எந்த நிலை ஏற்படும் என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளமுடியும்

1 comment: