Friday, February 11, 2011

‘கிலாபத்’ கவிதை

‘கிலாபத்’ வீழ்த்தப்பட்டது,தாங்க முடியாத சோகத்தால்இதயம் நிறைந்தது.
‘பலஸ்தீன்’ ஆக்கிரமிக்கப்பட்டது,அங்கத்தை துண்டாக்கிய வேதனைஉடலெங்கும் பரவியது.
‘ஆப்கான்’ அழிக்கப்பட்டது,வார்த்தைக்குள் வராத துயரம்கண்களை ஆறாக்கியது.
‘ஈராக்’ இடிக்கப்பட்டது,கனவிலும் காணாத கவலைதூக்கத்தை அபகரித்தது.
‘ஷரி அத்’ தை சாடினார்கள்,முழு ‘ஷரிஅத்தை’யும் அமுலாக்கும்‘கிலாபத்தே’ இலக்கென்றோம்..
குர்ஆனை மிதித்தார்கள்,ஒருவருக்கும் தயங்காமல்குரல் கொடுத்தோம்.ஓதி செயற்பட்டோம்.
தூதரை அவமதித்தார்கள்,ஒரு கணமும் ஓயாமல்பதில் கொடுத்தோம்.நபி வழியில் நாம் நடந்தோம்.
ஈமானை மறுக்கலாம்,இஸ்லாத்தை மறைக்கலாம்,முஸ்லிமை வெறுக்கலாம்,பல போர்கள் தொடுக்கலாம்,எமது இறுதி மூச்சும்இஸ்லாத்துக் கென்றோம் நாம்.
‘அபூ குரைப்’பின் சித்திரவதையும்,‘குவன்தனா மோபே’யின் சிறை வைப்பும்,அதிகார வர்க்கத்தின் அநீதியும்,முகவர் ஆட்சியிpன் அட்டூழியமும்,உளவுப்படையின் துன்புறுத்தலும்,மேற்குலகின் தலையீடும்,மீடியாவின் அபாண்டமும்,உச்ச கட்ட ஈமானின் …பரீட்சைகள் என்றோம் நாம்..
புனித பூமியை மீட்கவும்..ஆக்கிரமிப்பை அகற்றவும்..ஓன்று பட்டோம் நாம்.
குர்ஆனாய் நடமாடி..நபிவழியில் நாம் ஆள ..இன்றே உழைப்போம் வாருங்கள்.

No comments:

Post a Comment